தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணை அடுத்த வாரம்-முஜிபுர்

231 0

தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணையை அடுத்த வாரத்தில் மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும்  கட்சி தலைவர்கள் கூட்டத்தில்  பாராளுமன்ற நிலையில் கட்டளை சட்டங்களின் பிரகாரம் தேசிய அரசாங்கத்துக்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை என எதிர்தரப்பினர் கடும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தனர். அதன் காரணமாக தேசிய அரசாங்கத்திற்கான பிரேரணையை அடுத்த வாரத்தில் மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளோம்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்களின் ஆதரவு இல்லை என எதிர்தரப்பினர் கருதுகிறார்கள் என்றால் உடனடியாக தற்போதைய சூழ்நிலைக்கேற்ப ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும். அந்த தேர்தலை நடத்தி ஆட்சிப் பலத்தை உறுதிபடுத்தியதன் பின்னரே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்றார்.

Leave a comment