உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக எங்களின் அமைச்சுப் பதவிகளையும், பாராளுமன்ற உறுப்புரிமையையும் முன்னிலைப்படுத்தி அரசாங்கத்துடன் பேரம் பேசி வருவதாக தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம், இலக்கினை அடைய முடியாவிடின் பதவிகளை துறக்கவும் தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின அங்குரார்ப்பண நிகழ்வு இன்று பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.