மின்தூக்கியில் சிக்கிய வீரவன்ச குழுவினர்

224 0

Sஇலங்கை நாடாளுமன்றத்தின் மின்தூக்கியில் சிக்கிய  12 நாடாளுமன்ற  உறுப்பினர்களை  நாடாளுமன்ற பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.

நானும்  தினேஸ்குணவர்த்தன உட்பட 12 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மின்தூக்கியில் சிக்குப்பட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் லிப்டிலிருந்து  அவசர அழைப்பை விடுத்ததை தொடர்ந்து எங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட நாடாளுமன்ற பணியாளர்கள் 15 நிமிடத்தின் பின்னர் எங்களை பாதுகாப்பாக வெளியேற்றினர் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

Leave a comment