கிளிநொச்சி மாவட்டத்;தில் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர் சோளச்செய்கை அழிவடைந்திருப்பதாக பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் பொ.அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் படைப்புழுவின் தாக்கம் தொடர்பிலும் அதனைக் கட்டுப்படுத்தும் தொடர்பிலும் விளக்களித்த மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில், படைப்புழுவின் தாக்கம் கிளிநொச்சி மாவட்டத்திலும் அதிகளவில் உணரப்பட்டிருக்கின்றது.
கடந்த ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இது அடையாளம் காணப்;பட்டாலும் தற்போது வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இதன் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை, பச்சிலைபபள்ளி, ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இந்தப்பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அதிகளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 240 ஏக்கர் சோளச்செய்கை கடந்த பெரும்போகத்தின் போது மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதன் படைப்புழுவின் தாக்கத்தினால் 40 ஏக்கர் சோளச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருவையாறு, செல்வாநகர், போன்ற பகுதிகளில் வீட்டுத் தோட்டச்செய்கைகளிலும் இந்தப்படைப் புழுவினுடைய தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகள் பயிர் சிகிச்சை முகாம்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் பல்வேறு செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்,