ஹொரணையில் துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது!

389 0

ஹொரணை பகுதியில் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று  இரவு 7.30 மணியளவில் ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடவதுர பகுதியில் ஹொரணை அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது குழல் 16 ரக துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டு ஹொரணை பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளார்.

பெல்பிடிகொட போருவதண்ட பனங்கலவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ரங்கோடிகே நியால் பிரேமசந்திர எனப்படுபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment