ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம்

228 0

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட குழு கூட்டம் இன்று செவ்வாய்கிழமை கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது குறித்து  சகல உறுப்பினர்களுடனும் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் யோசனை உள்ளடங்கிய பிரேரணையொன்று கடந்த 31 ஆம் திகதி அவை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்திருந்தார். 

இந்நிலையில் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற கூட்ட தொடரில் தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் யோசனை குறித்து விசேட கவனம் செலுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாகவே இன்று கட்சியின் விசேட குழு கூட்டமும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. 

Leave a comment