யாழில் 80 கிலோ கஞ்சாவோடு கடத்தல்காரர்கள் இருவர் கைது

238 0

யாழ்ப்பாணம், தென்மராட்சியின் எல்லைப்பகுதியில் வைத்து நேற்று இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் 80 கிலோ கஞ்சா பொதிகளை கடத்திச் சென்று கொண்டிருந்த இரண்டு பேரை யாழ். மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர். 

மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஜெ.ஜெயறோசன்  தலைமையிலான  பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையிலேயே  கஞ்சா கடத்தல்காரர்கள் இருவரும் சுமார் 80 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக சாவகச்சேரி  பொலிஸார் தெரிவித்தனர். 

மேலும் கொழும்பிலிருந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுபவர்களோடு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அணியினர் திட்டமிட்ட வகையில் தொடர்புகளைப் பேணி கஞ்சா கொள்வனவு செய்வது போன்று திட்டமிட்டே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றதாக மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்ட இரண்டு கஞ்சா கடத்தல்காரர்களும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment