சம்பள பிரச்சினைக்கு மூன்று நாட்களில் தீர்வு – மனோ

4148 0

தோட்டத் தொழிலாளர் சம்பள பிரச்சினைக்கு மூன்று நாட்களில் தீர்வை பெற்றுக்கொடுப்போம் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஒரு சில நாட்களில் நாட்டு  மக்கள் நல்ல செய்தியை அறிந்துகொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார். 

தேசிய தினத்தை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் பம்பலப்பிட்டி மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட பூஜை வைபவத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில். 

இந்த நாட்டினுள்  ஊழல், தவறான நிர்வாகம், வீண் விரயம் ஆகியவற்றை நீக்கி நாடாக முன்னோக்கி செல்ல வேண்டும். பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டினை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களை  நாம் முன்னெடுத்து செல்கின்றோம். அதேபோல் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் ஒரே நாட்டுக்குள் அதிகாரங்களை பெற்றுக்கொடுத்து தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை  பெற்றுக்கொடுக்க செயற்பட்டு வருகின்றோம்.

அதேபோல் தோட்டத்தொழிலாளர் கேட்கும் சாதாரண கொடுப்பனவை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை நாம் அரசாங்கத்தில் இருந்துகொண்டே முன்னெடுத்து வருகின்றோம். அரசாங்க தலைமைகளுடன் அது குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.   நாளை அல்லது நாளை மறுதினம் அனைவருக்கும் நல்ல செய்தியொன்று கிடைக்கும் என்றார். 

Leave a comment