பிரதமருடனான பேச்சுவார்த்தை தோல்வியெனில் சத்தியாக்கிரகம் திகாம்பரம்

219 0

ஊக்குவிப்பு தொகை 140 ரூபாவேனும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவோம் என தெரிவித்த அமைச்சர் பழனி திகாம்பரம் ,பேச்சு வார்த்தையில் இணக்கப்பாடு ஏற்படாத பட்சத்தில் அரசாங்கத்தில் நிலைத்திருப்பது குறித்து தீர்க்கமான முடிவு எடுப்பதோடு ஹட்டனில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

Leave a comment