பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதாயின் சட்ட மூலத்தை அவரமாக நிறைவேற்ற வேண்டும்-ஜயம்பதி விக்ரமரத்ன

285 0

மாகாணசபைகள் ஒன்பதுக்குமான தேர்தல்களை விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் நடத்த அனைத்து கட்சிகளும் தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ளன. அவ்வாறு விகிதாசார முறையில எதிர்வரும் ஜுன் மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், பழைய முறையில் தேர்தலை நடத்தவதற்கான சட்ட மூலத்தை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார். 

மீண்டும் பழைய முறைமைக்கு தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும்போது பெண் பிரதிநிதிகளை தெரிவுசெய்வது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிகாட்டினார். 

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களும் விகிதாரசார தேர்தல் முறையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்தவதற்கு தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலுக்கான அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து வினவியப்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

Leave a comment