வீண் செலவு செய்த ஆடம்பரக் காரர்களே ஆட்சிக்கு வர தயாராகின்றனர்- சம்பிக்க

318 0

சூரிஜ் நகருக்கு விமானம் அனுப்பி வீட்டில் வளர்ப்பதற்காக நாயொன்றை எடுத்து வந்தவரையே ஜனாதிபதி வேட்பாாளராக நிறுத்த எதிரணி தயாராகி வருவதாகவும், இப்படிப்பட்ட ஒருவரே தம்மிடம் அதிகாரத்தை வழங்குமாறு கூறி வருவதாகவும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் வராத மாநாட்டு மண்டபங்கள், விமானம் வராத விமான நிலையங்கள், கிரிக்கெட் விளையாடாத கிரிக்கெட் மைதானங்கள், பெருமைக்காக கட்டிய துறைமுகங்கள் அமைத்தவர்கள் போன்று நாம் நாட்டை நாசம் செய்யவில்லை.ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறிக் கொள்ளும் நபரின் வீட்டிற்கு நாய் ஒன்றை எடுத்த வர சூரிஜ் நகரிற்கு விமானம் அனுப்பப்பட்டது. இவர்கள் தான் இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சிறந்த முகாமைத்துவ நிபுணர்கள் போன்று தம்மை கூறிக் கொள்கிறார்கள்.

இவர்கள் தான் விமான சேவையை நாசமாக்கினார்கள். இதன் பலனை இன்று அனுபவிக்க நேரிட்டுள்ளது எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சாடியுள்ளார்.

பதுளை பஸ்தரிப்பிட நிர்மாணப்பணிகளை பார்வையிடுவதற்காகச் சென்ற அமைச்சர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே இதனைக் கூறியுள்ளார்.

Leave a comment