மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

255 0

ஊரகஹ, பிரதேசத்தில் கலுவலகொட பாலத்திற்கு அருகில் மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த நபர் மிருக வேட்டைக்காக மின்சாரப் பொறி அமைப்பதற்கு வீதியிலுள்ள மின் கம்பத்தினால் மின்சாரம் பெற முயற்சிக்கும் போது இவ்வாறு மின்சாரம் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

தியபிட்டகல்லன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். 

சடலம் எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதேவேளை குறித்த பிரதேசத்தில் இதுபோன்ற சம்பவங்களால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக செய்தியாளர் கூறினார்.

Leave a comment