அலுவலக வளாகத்தில் போதைப்பொருட்களை பயன்படுத்த வடக்கு ஆளுநர் தடை

456 0

தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மதுபாவனை அல்லது புகைப்பிடிப்பதை தவிர்க்குமாறு வட. மாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் நாடளாவிய ரீதியில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அதிரடியாக தடை விதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

வட. மாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், அவர் அதிரடி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment