வடக்கு போக்குவரத்து தொடர்பான பேச்சுவார்த்தை 2 மாதங்களில்-அர்ஜுண

231 0

வடக்கில் போக்குவரத்துப் ஊழியர்களின் பிரச்சனைகள் மற்றும் போக்குவரத்துப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அர்ஜுண ரணதுங்க நேற்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ ஊழியர்களை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.

வடக்கு மற்றும் தென்பகுதி மக்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய முறையொன்றை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் வடக்கின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. உயர்தரத்துடன் கூடிய ரயில் மற்றும் பஸ்சேவைகளை வடமாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். 

Leave a comment