பொலிஸாரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்

214 0

கட்டான, பொலிஸ் பிரிவுக்கு உட்பட்டஹரிஸ்சந்திரபுரவில் பொலிஸாரின் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாலியல் துஷ்பிரயோக சம்பவம் ஒன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை தேடி இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அந்தப் பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரின் உறவினர் ஒருவர் குடிபோதையில் அங்கு அமைதியற்று செயற்பட்டுள்ளதுடன், பொலிஸாரின் துப்பாக்கியையும் பறிக்க முயற்சித்துள்ளார்.

இதன் போது துப்பாக்கி இயங்கியதில் அந்த நபரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் காயமடைந்த குறித்த நபரும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment