கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று பலி

225 0

அனுராதபுரம் – இளச்சிய, பேமடுவ பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் உள்ள கால்வாய் ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

நேற்று (21) பகல் 1.30 இற்கு ம் 2 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் ஒன்றரை வயதான ஹங்சனி விக்ரமசிங்க என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது. 

உயிரிழந்த குழந்தை விளையாடுவதற்காக கால்வாய் பகுதிக்கு சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

சம்பவத்தின் போது வீட்டில் தாய், தந்தை இருக்கவில்லை எனவும் பாட்டி மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் இளச்சிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment