கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி மனைவி பலி

212 0

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் கணவனினால் கத்தியால் குத்தப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார். 

குடும்ப பிரச்சினைகள் காரணமாக இவ்வாறு கணவனினால் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச் சம்பவம் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிங்டன் வீதியில் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

பௌசி தஸ்மியா என்கின்ற 28 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இன்று (22) காலை 6.00 மணியளவில் வீட்டிலிருந்து ஆடைதொழிற்சாலைக்கு வேலைக்குசெல்லும் போது கணவனான 35 வயதுடைய சுபியான் இன்ஸான் என்பவர் தனது மனைவிக்கு சராமரியாக கழுத்திலும் வயிற்றிலும் கத்தியால் குத்தியுள்ளதாக கந்தளாய் குற்ற விசாரணைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குடும்ப பிரச்சினைகள் காரணமாக இக் கத்திகுத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் 

மனைவி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும் கணவன் தலைமரைவாகியுள்ளதாகவும், சந்தேக நபரான கணவனுக்கெதிராக வழக்கொன்றும் கந்தளாய் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

கணவனை பொலிஸார் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதோடு, சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Leave a comment