ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

209 0

பொரளை புகையிரத கடவைக்கருகில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட பெண்ணை எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலுக்கமைய பொரளை டி தோட்ட புகையிரத கடவைக்கருகில் போதைப்பொருளில் விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் இன்று காலை 11 மணியளவில் கைதுசெய்யப்பட்டார். 

இச் சம்பவத்தின் போது பேஸ்லைன் மாவத்தை பொரளையைச் சேர்ந்த 38 வயதுடைய தீபாங்கனி என பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார். 

இவரை கைதுசெய்த வேளையில் அவரிடமிருந்து 5 கிராம் 773 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்கப்பட்டன. 

Leave a comment