ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வு வேண்டும் – சந்திரசிறி கஜதீர

303 0

ஒற்றையாட்சிக்குள் அனைத்து இன மக்களதும் உரிமைகளை பாதுகாப்பதுடன் அதிகாரப்பகிர்வு ஏற்படுத்தப்படவேண்டும் அதன் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியலமைப்பானது இங்கு வாழும் அனைத்து இன மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் இருக்கவேண்டும். அதேபோன்று ஒற்றையாட்சிக்குள் அனைத்து பிராந்தியங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதன் மூலமே நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்டுத்த முடியும். என்றார்.

Leave a comment