20 வயதில் உலக நாடுகளின் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்திய தமிழ் இளைஞன்!

276 0

ஈழ தமிழ் இளைஞன் ஒருவர் உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார்.


ஈழப் பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளார்.

அவரது உடல் நிறமே இதற்கு பிரதான காரணம் எனவும் கூறப்படுகிறது. மாநிறமான மகாதேவன், ஆடை அலங்கார உலகில், தெற்காசியாவை சேர்ந்த நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார்.

தனது உடல் நிறம் குறித்து தான் பெருமை கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆசியாவை சேர்ந்த பலர் இன்னும் வெள்ளை நிற தோலை எதிர்பார்ப்பதாக மகாதேவன் கூறியுள்ளார்.

அவர் ஆடை அலங்கார துறையில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

லண்டன், பாரிஸ், மிலான் மற்றும் நியூயோர்க் உட்பட உலகில் புகழ்பெற்ற ஆடை அலங்கார கண்காட்சிகளில் முக்கியமான பிரபலமாக அவர் திகழ்ந்து வருகிறார்.


Leave a comment