வெளியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் விரைவில் பூர்த்தி-சம்பிக்க

226 0

கொழும்பு டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189 ஆவது தோட்டத்தில் தடைப்பட்டுள்ள வெளியேற்றப்பட்ட மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் விரைவில் பூர்த்திச் செய்யப்படும் என்று மா நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

கொழும்பு நகரத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு சமகால அரசாங்கத்தின் கீழ் 20 ஆயிரம் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். 

கொழும்பு டொரிங்டன் மாவத்தை இலக்கம் 189 வது தோட்டத்தில் நேற்று இடம்பெற்ற தைப்பொங்கல் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர். 

சுதந்திரம் கிடைத்தது முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் கொழும்பு நகர மக்களுக்கு 14 ஆயிரம் வீடுகள் மாத்திரம் அமைக்கப்பட்டன என்றும் அமைச்சர் கூறினார். 

அனைத்து இன மக்களுக்கும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த வைபவம் தொடர்பாக அமைச்சர் குறிப்பிடுகையில், சிங்கள மக்களின் புத்தரிசி விழாவுக்கு அமைவாக இது அமைந்தது என்றும் தெரிவித்தார். 

இதனால் பல்வேறு இன, மத ரீதியில் பிளவுபடாமல் இருப்பதற்கு கலாச்சாரங்கள் ஒன்றிணைக்கின்றன. இதனால், கலாச்சாரங்களைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டுமென்றும் கூறினார். 

இந்தத் தோட்டத்தில் பழைமையான வீடுகளில் இருந்த மக்களை வெளியேற்றி புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது இதற்கான அடிப்படைப் பணிகள் மாத்திரமே இடம்பெற்றிருப்பதாக பொதுமக்கள் இந்த நிகழ்வின் போது சுட்டிக்காட்டினார்கள். 

இதற்குப் பதிலளித்த அமைச்சர், மிக விரைவில் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பொதுமக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார். 

Leave a comment