கொள்ளுபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோல்பேஸ் கேட் ஒழுங்கை பகுதியில் உள்ள வீடொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (19) காலை 11.45 மணியளவில் பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டில் ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதுருகிரிய, அரங்கல பகுதியை சேர்ந்த 49 வயதுடைய சேனக ஶ்ரீலால் ஜயசிங்க என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொள்ளுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.