அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து

216 0

விவசாய திணைக்களத்தின் திட்டப் பிரிவை சேர்ந்த அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளியு.எம்.டப்ளியு வீரக்கோன் தெரிவித்துள்ளார். 

சேனா படைப்புழுவை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தின் காரணமாக எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் விவசாய திணைக்களத்தின் திட்டப் பிரிவை சேர்ந்த அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 

45 ஆயிரம் ஏக்கர் சோள பயிர்ச்செய்கைக்கு இந்த படைப்புழுவினால் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளியு.எம்.டப்ளியு வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

Leave a comment