போலி நாணயத்தாள்களை அச்சிட்ட ஒருவர் கைது

187 0

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவர் ஜல்தர பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேகநபர் தனது வீட்டில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த பிரதேசத்தில் இருக்கின்ற வர்த்தக நிலையங்களில் போலி நாணயத்தாள்களை வழங்கி பொருட்களை கொள்வனவு செய்வது சம்பந்தமாக நவகமுவ பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. 

இதன்போது நடத்தப்பட்ட வீதிச் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபரிடமிருந்து 08 ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இதனையடுத்து அவரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அங்கிருந்து போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 48 மீட்கப்பட்டுள்ளன. 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment