புதிய அரசியலமைப்பு பாராளுமன்றத்தில் நிறைவேறிய பின் மக்கள் தீர்ப்பிற்காக விடப்படும் – ராஜித

199 0

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை. 

அரசியல் அமைப்புக்கான வரைபு அவசரமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. 

ஆகவே இந்த புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் அனைவரினதும் நிலைபாட்டினையும் பெற்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மையை நரூபித்ததன் பின்னர் மக்கள் தீர்ப்பினூடாகவே நிறைவேற்றப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். 

அலரிமாளிகையில் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான பாரிய விமர்சனங்கள் தற்போது தேவையற்றதாகும். 

புதிய அரசியல் அமைப்பை உருவாக்கம் நடவடிக்கைகள் அவசரமாக ஆரம்பிக்கப்பட்டும் இல்லை.

 2015 ஆம் ஆண்டே புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டன. 

2015 அம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரே அரசியல் அமைப்புசபையினூடாக அதன் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார். 

Leave a comment