தரம் 01 இற்கு புதிய மாணவர் அனுமதிக்கான தேசிய நிகழ்வு இன்று

221 0

அரச பாடசாலைகளில் தரம் 01 இற்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான தேசிய நிகழ்வு இன்று (17) நடைபெறவுள்ளது.

உத்தியோகபுர்வ நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தலைமையில் கிரியுள்ள, கணேகொட ஆரம்பப் பிரிவு பாடசாலையில் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாட்டிலுள்ள 10 ஆயிரத்து 194 பாடசாலைகளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை தரம் 01 இற்கு மூன்று லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Leave a comment