பாலத்தில் இருந்து விழுந்து பெண்ணொருவர் பலி

267 0

பாலத்தில் இருந்து வாய்க்கால் ஒன்றில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

ஹரங்கல பகுதியை சேர்ந்த பிசோ மெனிகே எனும் 78 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

குறித்த பெண் நேற்று இரவு 11 மணியளவில் காணாமல் போன நிலையில் உயிரிழந்த பெண்ணின் மகன் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தேடுதலில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் நாவலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment