ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை

258 0

எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். 

கொஸ்கம பிரதேசத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

ஒவ்வொரு கட்சியிலும் வெவ்வேறான கருத்துக்கள் நிலவுவதாகவும், உடன்பாட்டு அடிப்படையில் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அனைத்து தலைவர்களும் பல தடவைகள் இதனைக் கூறியுள்ளதாகவும், அதன்படி இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லை என்றும் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார். 

ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

அதேநேரம் அரச பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக பிரதமர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேவைப்படி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறியுள்ளார்.

Leave a comment