சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்கள் கைது

283 0

சட்டவிரோதமான முறையில்  தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடற்படையினருடன் இணைந்து  காலி பிரதேச மீன்வளத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது, அம்பலாங்கொடை பிரதேசத்தில் இருந்து மூன்று கடல் மைல் தூரத்தில் சட்டவிரோதமான முறையில் வலைகளை பயன்படுத்தி மீன்களை பிடித்துகொண்டிருந்த 11 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

Leave a comment