சந்திரிக்காவிற்கு அழைப்பில்லை தயாசிறிக்கு பாராட்டு மலை – றோஹன

199 0

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தயாசிறி ஜயசேகர இன்று வியாழக்கிழமை கட்சி தலைமையகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் றோஹன லக்ஷ்மன் பியதாச, பேச்சாளர் மஹிந்த சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பொதுச் செயலாளர் றோஹன லக்ஷ்மன் பியதாச தயாசிறிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, சுதந்திரகட்சிக்கான தனது சேவை தொடரும் எனவும் தெரிவித்தார். 

Leave a comment