சந்தேக நபர்களுக்கும் கஞ்சாவுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை – சுமந்திரன்

217 0

வடமராட்சி செம்பியன்பற்று பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான  இளைஞர்களை விடுவிக்க பொலிசாருக்கு எந்த  அழுத்தங்களையும் கொடுக்கவில்லை என  சுமந்திரன் தெரிவித்தார்.

அத்தோடு அந்த சந்தேக நபர்களுக்கும் கஞ்சாவுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லையெனவும் சபையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

பாராளுமன்றத்தில்  இன்று  வியாழக்கிழமை இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல், ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் ஆகிய சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் விமல்வீரவன்ச கஞ்சா கடத்திய நபர்களை விடுவிக்குமாறு இந்த சபையிலுள்ள உறுப்பினர் ஒருவர் பொலிஸ் உயரதிகாரிக்கு அழுத்தங்களை கொடுத்ததாகவும், சுமந்திரன் எம்.பியே அவர் எனவும் குறிப்பிட்டார். 

Leave a comment