எரிபொருள் நிலையமொன்றை அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

216 0

உல்லாச பயணிகள் அதிகளவில் செல்லும் மாவட்டமான நுவரெலியா மாவட்டத்தில் ரந்தெனிகல, ராகல, வலப்பன ஆகிய நகரங்களில் எரிப்பொருள் நிரப்பும் நிலையம் இல்லாததால் வாகான சாரதிகள் மிகவும் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

வலப்பன, நீல் தன்டாஹினர ,தெரிபேகென,கல் கெட்டிவல, உடுமாதுர. ஆகிய கிராமங்களில் உள்ள பஸ்கள், பார ஊர்திகள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பளரும் எரிப்பொருள் பெறுவதற்காக ராகல நகரிற்கு செல்ல வேண்டியுள்ளது

எனவே வலப்பன நகரில் குறித்த  மக்களுக்காக எரிப்பொருள் நிரப்பும் நிலையமொன்றை அமைத்து தருமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமும், அரசாங்கத்திடமும் குறித்த பகுதி வாழ் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Leave a comment