சட்டவிரோதமாக மணல் கடத்திய சாரதிகள் கைது

212 0

வவுனியா செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கிரவல் மண்களை ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களை இன்று காலை பொலிஸார் கைப்பற்றியதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியூடாக சென்ற டிப்பர் வாகனங்களை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் கிரவல் மணல் ஏற்றுவதற்கான அனுமதியின்றி கிரவல் மண்களை ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர்களை பொலிஸார் கைப்பற்றியதுடன் அதன் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்வத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நபர்களை ஆஜர்ப்படுத்தவுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment