புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் நான்குபேர் விடுதலை!

312 0

ex-ltte-3-720x480பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் நான்குபேர் இன்று சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனர்வாழ்வு நிலையத்தின் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கெமிடோன் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு குறித்த போராளிகளை அவர்களது குடும்பத்துடன் இணைத்துவைத்தார்.

இதன்போது, இராணுவத்தினரதும், புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளினதும் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது.

பூந்தோட்ட புனர்வாழ்வு முகாமில் 19பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் நிலையில், நான்குபேர் மாத்திரமே இன்று விடுதலையானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.