வட மாகாண முதலமைச்சருக்கெதிராக இன்று வவுனியாவில் போராட்டம்!

344 0

gnanasara-1வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தப்போவதாக பொதுபல சேனா அறிவித்துள்ளது.

‘எழுக தமிழ்’ பேரணியின்போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியை நடாத்தப்போவதாக அக்கட்சியின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், போருக்குப் பின்னர் அமைதியான சூழல் நிலவி வரும் நிலையில் அதனைக் குழப்பும் நடவடிக்கையில் விக்னேஸ்வரன் செயற்படுகின்றார். அதற்கெதிராகவே நாம் போராட்டம் நடாத்தவுள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் வாழ முடியாது என விக்னேஸ்வரன் சொல்கின்றார்? பதிலுக்கு நாங்கள் கொழும்பில் தமிழர்கள் வாழமுடியாது எனக் கூறமுடியுமா?

அமைதியான சூழ்நிலையில் வாழும் சிங்கள மக்களை உசுப்பிவிடும் வடக்கு மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே நாங்கள் இந்தப் போராட்டத்தை நடாத்தவுள்ளோம்.