மனைவி கொலை – கணவனுக்கு மரண தண்டனை

318 0

tamildailynews_8749309778214மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது.

கம்பஹா மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு நுவரெலியா காவல்துறை பிரிவிற்குற்பட்ட பிதுறுதாலகல வனப்பகுதியில் வைத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது.

மினுவங்கொடையை சேர்ந்த குறித்த கொலையாளி, தமது மனைவியை நுவரெலியாவுக்கு அழைத்து வந்து கொலை செய்துள்ளார்.

பின்னர் தலைமறைவாகி இருந்த நிலையில் 1999ஆம் ஆண்டு கந்தப்பளையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பைபில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கே இவ்வாறு மரண தண்டனை தீர்ப்பு இன்று விதிக்கப்பட்டது

மரண தண்டனை தீர்ப்பை பெற்றவர் தனது 19 வயதிலேயே இந்த கொலையை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.