லசந்த கொலை – இராணுவ அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

302 0

lasantha21லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சந்தேகத்திற்குரியவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை லசந்த விக்கிரமதுங்க சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவரது உடலம் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த 2009ஆம் ஆண்டு வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அதியுயர் பாதுகாப்பு வலயப்பகுதியான அத்திடிய பகுதியில் வைத்து ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.