யாழில் தோட்டத்தில் வேலை செய்த குடும்பஸ்தர் மயங்கி விழுந்து மரணம்

250 0

யாழில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

நல்லூர் பருத்தித்துறை வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை சசிகரன் (வயது 46) என்பவரே உயிரிழந்தவராவர். 

குறித்த நபர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஊரெழு பகுதியில் உள்ள தோட்டமொன்றில் புல்லு வெட்டிக்கொண்டிருந்த சமயம் மதிய நேரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

அதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர். 

அதனால் அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

Leave a comment