நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்சபான நீர்வீழ்ச்சியின் பாதுகாப்பற்ற பகுதியை பார்வையிட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் தவறி விழுந்தது உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் புதுவருடப்பிறப்பன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மரணித்தவர் பிரித்தானிவைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த நபர் தனது வெளிநாட்டு நண்பர்களுடன் நோட்டன் பிரிட்ஜ் தெபடன் சமனெலிய தோட்ட பகுதியில் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரணித்தவரின் உடல் கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.