வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்லெண்ணப் புகையிரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணம்

343 0

வடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது முகாம்களில் வசித்துவரும் மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து வழங்கும் நோக்கில் புகையிரத துறையை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டில் நல்லெண்ணப் புகையிரத சேவையொன்று எதிர்வரும் 2019 ஜனவரி மாதம் முதலாம் திகதி செவ்வாய்கிழமை கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணிக்கவுள்ளது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து, உரியவர்களிடம் கையளிக்கும் நோக்கிலான இந்த நல்லெண்ண புகையிரத சேவை தொடர்பில் அதனை ஏற்பாடு செய்துள்ள புகையிரத துறையைப் பாதுகாக்கும் அமைப்பின் செயலாளர் ருவன் பத்திரனகே குறிப்பிட்டார்.

Leave a comment