நீர் விநியோகம் தடை!

337 0

மின்சாரம்  துண்டிக்கப்பட்டுள்ளதால்  களுத்துறையை அண்டிய சில பகுதிகளில் இன்று  காலை 8 முதல் மாலை 5 மணிவரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டு வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த , நாகொட, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதியில் இன்று மாலை 5மணிவரை நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மின்சாரம்  துண்டிக்கப்பட்டுள்ளதால் தற்காலிக நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

Leave a comment