மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை

611 0

neville_wanniarachchiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு முதன்மை நீதிமன்றத்தில் இன்று முன்னிலையானபோதே அவருக்கான பிணை அனுமதி வழங்கப்பட்டது

இதற்கமைய அவர் 10 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் மற்றும் 10 லட்சம் ரூபா சரீர பிணையிலும் அனுமதிக்கப்பட்டார்.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் சொத்து விபரங்களை வெளியிடாமை உள்ளிட்ட 5 வழக்குகளை அவருக்கு எதிராக கையூட்டல் ஆணைக்குழு கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.