இரு வாரங்களுக்குள் நாட்டில் ஸ்தீரத் தன்மையை ஏற்படுத்துவோம்- வஜிர

266 0

அரசியல் நெருக்கடி நிலைமையினால் ஸ்தீரத் தன்மையை இழந்துள்ள நாட்டை ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் இரு வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு கொண்டுவர முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த நாட்டில் நீதிமன்றங்கள் சுதந்திரமாக செயற்படுகின்றது என்பதை சர்வதேசம் கண்கூடாக கண்டது. இது எமது நாட்டுக்கு சர்வதேச ரீதியில் நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எந்தவித அச்சமும் இன்றி எமது நாட்டில் முதலீடு செய்யலாம். அநீதம் இழைக்கப்பட்டால் நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment