ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனி ஒருபோதும் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஹிட்லரை போன்று செயற்பட முடியாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை அனைவரும் மதிக்க வேண்டும். இதற்கு மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் மாத்திரம் விதிவிலக்கல்ல. நாங்கள் தற்போது எதிர் தரப்பினராக செயற்படுவதே சிறப்பானதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இடைக்கால அரசாங்கத்தினை பொறுப்பேற்று மஹிந்த ராஜபக்ஷ தவறு இழைத்து விட்டார் என்பதை பலமுறை எடுத்துரைத்தும், சில பதவி மோகம் கொண்டவர்களினால் எமது கருத்து மதிப்பிழக்கப்பட்டது. இனியாவது மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.