வாகன விபத்தில் 9 பேர் காயங்களுடன் வைத்தியாசலையில் அனுமதி

204 0

எல்ல – வெல்லவாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

 

குறித்த நபர்கள் கதிர்காமத்துக்கு சென்று திரும்பும் போது, வேன் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்தவர்கள் காயமடைந்த  நிலையில் பதுளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில்  மூவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment