மஹிந்தவின் மேன்முறையீடு இன்று பரிசீலனை

468 0

மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்த விசேட மேன்முறையீட்டு மனுவானது இன்றைய தினம் உயர் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிர­தமர் பத­வி­யிலும் அமைச்சர் பத­வி­யிலும் கட­மை­களை முன்­னெ­டுக்க தனக்கு  மேன் முறை­யீட்டு நீதி­மன்றம்  விதித்­துள்ள இடைக்­கால தடையை நடை முறைப்­ப­டுத்­து­வதை தடுக்கும் முக­மாக உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி, மஹிந்த ராஜ­பக்ஷ   தாக்கல் செய்த விஷேட மேன் முறை­யீட்டை இன்று வெள்­ளிக்கிழமை பரி­சீ­ல­னைக்கு எடுக்க உயர் நீதி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது.

அத்­துடன் அமைச்­சர்­க­ளாக பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ, சமல் ராஜ­பக்ஷ , தினேஷ் குண­வர்­தன  மற்றும் விஜே­தாஸ ராஜ­பக்ஷ ஆகி­யோரும் தாம்  அமைச்சுப் பத­வி­களில் தொடர விதிக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால தடையை செயற்­ப­டுத்­து­வதை தடுக்கும் வகையில் உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிக்­கு­மாறு கோரி­யுள்ள விஷேட மேன் முறை­யீட்­டையும் அன்­றைய தினமே பரி­சீ­லிப்­ப­தாக உயர் நீதி­மன்றம் அறி­வித்­தது.

இவ்­விரு விஷேட மேன் முறை­யீ­டு­களும் நேற்றுமுன்தினம் முதல் முறை­யாக உயர் நீதி­மன்றின் 403 ஆம் விசா­ரணை அறையில் ஆரா­யப்­பட்­டது. இதன்­போதே பிரி­யந்த நீதி­ய­ரசர் பிரி­யந்த ஜய­வர்­தன தலை­மை­யி­லான பிர­சன்ன ஜய­வர்­தன , எல்.டி.பி. தெஹி­தெ­னிய ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழுவே இதனை அறி­வித்­தது.

இதேவேளை பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் இன்றைய தினம் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் மஹிந்த தரப்பின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment