ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில்

249 0

பேருவளை, பலப்பிட்டிய கடற்பகுதியில் 231 கிலோ கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த இரு சந்தேக நபர்களையும் இன்று (12) கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த இருவரிடமும் மேலதிக விசாரணைகள் நடத்த உள்ளதால் அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் அவர்களை 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Leave a comment