துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

251 0

சபுகஸ்கந்த, கல்வல சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதுடைய வியாபாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் சம்பவ இடத்தை தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சபுகஸ்கந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment