நம்பிக்கை பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

266 0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.

கடிதம் ஒன்றின் மூலம் சபாநாயகர் இந்த விடயத்தினை ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற நிலையற் கட்டளைகளின் அடிப்படையில் இலத்திரனியல் முறைப்படி வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதன் போது ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைக்க பெற்றதை அடுத்து பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a comment