மலையக மக்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்கிறது

249 0

பெருந்தோட்ட பகுதிகளில் 9ஆவது நாளாக இன்றும் தோட்ட தொழிலாளர்கள் பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அறிக்கை விடுத்த போதும் தொழிலாளர்கள் அதனை பொருட் படுத்தாது மஸ்கெலியா,சாமிமலை, மற்றும் நல்லத்தண்ணி பகுதிகளில் பணி பகிஸ்கரிப்பு போராட்டம் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மஸ்கெலியா சாமிமலை தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா சாமிமலை பிரதான பாதையை மறித்து டயர்களை எரித்தும் கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment